search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new groom dies"

    • அரசு மருத்துவமனையில் முற்றுகையிட்டு சிகிச்சை சரியான முறையில் அளிக்காமல் கவன குறைவால் உதயகுமார் இறந்ததாக கூறி முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • தொடர்ந்து ஏராளமான போலீசார் அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிக்கப்பட்டனர்.

    கடலூர்:

    கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 27). அவரது மனைவி மனிஷா. இவர்களுக்கு 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமண நாளில் இருந்து சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். மேலும் உதயகுமார் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல இருந்தார்.

    இந்த நிலையில் உதயகுமாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடலூர் அரசு மருத்துவமனையில் கடந்த 8-ந்தேதி அறுவை சிகிச்சை செய்வதற்காக சேர்க்கப்பட்டார். நேற்று (10 ந் தேதி) காலை உதயகுமாருக்கு அறுவை சிகிச்சை நடந்தது.

    இன்று (11-ந் தேதி) அதிகாலை உதயகுமாருக்கு திடீரென்று உடல்நிலை மோசமாகி அரசு மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனை அறிந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் 100-க்கும் மேற்பட்டவர்கள் கடலூர் அரசு மருத்துவமனைக்கு திரண்டனர். பின்னர் அரசு மருத்துவமனையில் முற்றுகையிட்டு சிகிச்சை சரியான முறையில் அளிக்காமல் கவன குறைவால் உதயகுமார் இறந்ததாக கூறி முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஏராளமான போலீசார் அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிக்கப்பட்டனர்.

    பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வக்கீல் சிவராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் கூறுகையில், தற்போது உதயகுமாருக்கு 27 வயது ஆகியுள்ளது. இரணைய ஆபரேஷன் செய்த உதயகுமார் ஹார்ட் அட்டாக்கால் இறந்ததாக கூறப்படுகிறது.

    இந்த வயதில் இது போன்ற நிகழ்வு ஏற்படுமா? ஆகையால் உதயகுமாருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மற்றும் செவிலியர்களின் கவனக்குறைவால் அவர் இறந்து உள்ளார். மேலும் இவரது இறப்பில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது.

    மேலும் இவரது பிரேத பரிசோதனை கடலூர் அரசு மருத்துவமனையில் பண்ணாமல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். மேலும் அங்கு பிரேத பரிசோதனை செய்யும் போது வீடியோ பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதனை ஏற்றுக்கொண்டால் எங்கள் போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து போலீசார் இவர்களின் கோரிக்கையை ஏற்றதை தொடர்ந்து இறந்த உதயகுமார் மனைவி மனிஷா, சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார் அளித்ததன் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • சரவணம்பட்டி அருகே உள்ள அம்மன் நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர்.
    • முத்துக்குமார் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவதற்காக துடியலூர் பகுதிக்கு சென்றார்.

    கோவை:

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 31). இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சுகன்யா(29) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. பின்னர் கணவன்-மனைவி இருவரும் கோவை சரவணம்பட்டி அருகே உள்ள அம்மன் நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர். முத்துக்குமார் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட செல்வது வழக்கம். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திடீரென வாந்தி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சிகிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அல்சர் பாதிப்பு இருப்பதாக தெரிவித்தனர்.

    இதனையடுத்து முத்துக்குமார் அல்சர் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் முத்துக்குமார் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவதற்காக துடியலூர் பகுதிக்கு சென்றார். மதியம் 12.30 மணியளவில் வீட்டிற்கு திரும்பினார். அப்போது திடீரென வாந்தி எடுத்து மயங்கினார்.

    இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த அவரது மனைவி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் முத்துகுமாரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற னர்.

    அங்கு அவரை பரி சோத னை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே முத்துக்குமார் இறந்து விட்ட தாக தெரிவித்தனர். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    வந்தவாசி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் திருமணமாகி 6 மாதமே ஆன புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த ஆரியாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சொக்கலிங்கம் மகன் பழனி (வயது 28). விவசாயியான இவர் தனது டிராக்டருக்கு டீசல் வாங்கி வர நேற்று இரவு வந்தவாசி சென்றார்.

    டீசல் வாங்கிக்கொண்டு வந்தவாசியில் இருந்து ஆரியாத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். விளாங்காடு நெடுஞ்சாலை சளுக்கை கூட்டு ரோடு அருகே வந்த போது வந்தவாசி நோக்கி வந்த கார் பழனி ஓட்டிச்சென்ற பைக் மீது மோதியது.

    இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக ரத்தவெள்ளத்தில் பழனி பலியானார். பழனிக்கும் மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த அமுதவல்லி என்பவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது.

    வந்தவாசி வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமாகி 6 மாதம் ஆன நிலையில் புது மாப்பிள்ளை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சோழவந்தான் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் புதுமாப்பிள்ளை பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
    சோழவந்தான்:

    வாடிப்பட்டி அருகே உள்ள சல்லக்குளத்தை சேர்ந்தவர் குருவையா. இவரது மகன் கார்த்திக் (வயது 27). டிரைவரான இவருக்கு அடுத்த மாதம் 12-ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று கார்த்திக் அதே கிராமத்தை சேர்ந்த நண்பர் சீனிவாசன் என்பவருடன் மதுரைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் இருவரும் ஊருக்கு புறப்பட்டனர்.

    வாடிப்பட்டி அருகே உள்ள நகரி 4 வழிச்சாலையில் வந்து கொண்டு இருந்த போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

    கார்த்திக், சீனிவாசன் ஆகியோரை அப்பகுதியினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக இறந்தார். சீனிவாசன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    திருமணமாக இருந்த புதுமாப்பிள்ளை கார்த்திக் விபத்தில் பலியானது அவரது உறவினர் மட்டுமின்றி கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
    எண்ணூரில் திருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை லாரி மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    திருவொற்றியூர்:

    எண்ணூர், சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் ராகேஷ் (வயது 26). இவருக்கு கடந்த 2 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. நேற்று இரவு அவர் காசிமேட்டில் இருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.

    எர்ணாவூர் ரவுண்டானாவில் வந்த போது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ராகேஷ் பலியானார். இது தொடர்பாக மாதவரம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து திருவண்ணாமலையை சேர்ந்த லாரி டிரைவர் சதீஷ்குமாரை கைது செய்தனர். #Tamilnews
    ×