செய்திகள்
செயின் பறிப்பு

தூத்துக்குடியில் பெண்ணிடம் செயின் பறிப்பு

Published On 2019-07-14 17:14 GMT   |   Update On 2019-07-14 17:14 GMT
தூத்துக்குடியில் கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த கொண்டிருந்த பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் 3 பவுன் செயினை பறித்து சென்று தப்பி ஓடி விட்டார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி பிரையண்ட் நகர், 5-வது தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி கவிதா(வயது 40). இந்நிலையில் நேற்று இரவு கடைக்கு சென்றுவிட்டு கவிதா வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் கவிதா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் எடையுள்ள செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றார்.

இது குறித்து தென்பாகம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News