செய்திகள்
கைது

திருச்சி அருகே நகைக்கடையில் திருடிய 2 பெண்கள் கைது

Published On 2019-07-13 04:51 GMT   |   Update On 2019-07-13 04:51 GMT
திருச்சி அருகே நகைக்கடையில் திருடிய 2 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தா.பேட்டை:

திருச்சி மாவட்டம் முசிறி போலீஸ் நிலையம் எதிரே சந்தோஷ்குமார் என்பவர் நகைக்கடை வைத்துள்ளார். நேற்று இவரது கடைக்கு 2 பெண்கள் வெள்ளி கொலுசு வாங்க வந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் கொலுசுகளை வாங்கி விட்டு அங்கிருந்து சென்றனர்.

அவர்கள் சென்ற பிறகு, சந்தோஷ்குமார் கடையில் இருந்த வெள்ளி கொலுசுகளை சரிபார்த்தார். அப்போது 1.290 கிலோ கிராம் எடை கொண்ட 15 ஜோடி வெள்ளி கொலுசுகளை காணவில்லை. உடனே அவர் கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்ட போது, கடைக்கு வந்த 2 பெண்கள் 15 ஜோடி கொலுசுளை திருடி சென்றது தெரியவந்தது.

உடனே இது குறித்து சந்தோஷ்குமார் முசிறி போலீசில் புகார் செய்தார். போலீசார் 2பெண்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்ட போது முசிறி கைகாட்டி பஸ் நிறுத்தத்தில் 2 பெண்களும் நின்று கொண்டிருந்தனர்.

இதையடுத்து அவர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையை சேர்ந்த ராணி (வயது 32), தஞ்சையை சேர்ந்த சாந்தி (50) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து, 15 ஜோடி வெள்ளி கொலுசுகளை பறிமுதல் செய்தனர்.கைதான 2 பெண்களும் முசிறி கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர்.

Tags:    

Similar News