செய்திகள்
ஆரல்வாய்மொழியில் வாகனம் மோதி கூலித்தொழிலாளி பலி
ஆரல்வாய்மொழியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கூலித்தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழியை அடுத்த செண்பகராமன் புதூர் ஆதிச்சன்புதூர் புதுக் காலனியை சேர்ந்தவர் தேவதாஸ் (வயது 65). கூலி தொழிலாளி. இவரது மனைவி ரெபேகா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
நேற்று இரவு தேவதாஸ் ஆரல்வாய்மொழி மூவேந்தர் நகரில் உள்ள மருமகள் வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர் வீட்டிற்கு வருவதற்காக நடந்து வந்து கொண்டிருந்தார்.
ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடி அருகே வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் தேவதாஸ் மீது மோதியது. இதில் உடல் சிதைந்து தேவதாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆரல்வாய் மொழி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்த தேவதாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தேவதாஸ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆரல்வாய்மொழியை அடுத்த செண்பகராமன் புதூர் ஆதிச்சன்புதூர் புதுக் காலனியை சேர்ந்தவர் தேவதாஸ் (வயது 65). கூலி தொழிலாளி. இவரது மனைவி ரெபேகா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
நேற்று இரவு தேவதாஸ் ஆரல்வாய்மொழி மூவேந்தர் நகரில் உள்ள மருமகள் வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர் வீட்டிற்கு வருவதற்காக நடந்து வந்து கொண்டிருந்தார்.
ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடி அருகே வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் தேவதாஸ் மீது மோதியது. இதில் உடல் சிதைந்து தேவதாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆரல்வாய் மொழி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்த தேவதாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தேவதாஸ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.