கன்னியாகுமரி அருகே பிளஸ் 2- மாணவிக்கு பாலியல் தொல்லை: 2 வாலிபர்கள் கைது
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ஆண்டிவிளையை சேர்ந்தவர் அபிஷேக் (வயது 21), மேல மணக்குடியை சேர்ந்தவர் சகாய ஜினு (19).
அபிஷேக், சகாய ஜினு இருவர் மீதும் கன்னியாகுமரி சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பிளஸ் 2 மாணவி ஒருவர் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். புகாரில் வாலிபர்கள் இருவரும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
மாணவி கொடுத்த புகாரின் பேரில் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் வாலிபர்கள் இருவரும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து வாலிபர் அபிஷேக், சகாய ஜினு இருவரையும் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி கைது செய்தார். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.