செய்திகள்
கடத்தல்

மதுரை அருகே திருமண ஆசை காட்டி சிறுமி கடத்தல்

Published On 2019-07-03 10:37 GMT   |   Update On 2019-07-03 10:37 GMT
திருமண ஆசை காட்டி சிறுமியை கடத்திய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மதுரை:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள மேலக்கால் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நீதி. இவரது 17 வயது மகளை நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த பரமன் என்பவர் திருமண ஆசை காட்டி கடத்திச் சென்று விட்டார்.

பரமனுக்கு அதே பகுதியைச் சேர்ந்த கோபி மற்றும் அவரது மனைவி கார்த்தீஸ்வரி ஆகியோர் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது.

இது குறித்து சிறுமியிடம் தாயார் ஈஸ்வரி காடுபட்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜா புகாரை விசாரித்து பரமன் மற்றும் கோபி, கார்த்தீஸ்வரி ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கடத்தப்பட்ட சிறுமியையும், வாலிபரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News