செய்திகள்
திருவண்ணாமலை அருகே பஸ் படிக்கட்டில் பயணம் செய்த வாலிபர் கம்பத்தில் மோதி பலி
திருவண்ணாமலை அருகே பஸ் படிக்கட்டில் பயணம் செய்த வாலிபர் கம்பத்தில் மோதி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் கமலாபுத்தூரை சேர்ந்தவர் காசி இவரது மகன் மதியழகன் (வயது 22). இவர் இன்று காலை கமலாபுத்தூரில் இருந்து திருவண்ணாமலைக்கு தனியார் பஸ்சில் சென்றார். பஸ்சில் கூட்டம் அதிகம் இருந்த காரணத்தால் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தார்.
கலெக்டர் அலுவலகம் அருகே சென்ற போது அங்கு கட்டி வரும் டோல்கேட் கம்பத்தின் மீது பஸ் உரசியபடி சென்றது. இதில் படிக்கட்டில் பயணம் செய்த மதியழகன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் சிலர் லேசான காயமடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்த போலீசார் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.