செய்திகள்
ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்கு பதியாத காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு
ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்கு பதியாத காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையருக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னை:
கட்டாய ஹெல்மெட் ,சீட் பெல்ட் அணிவது உள்ளிட்ட விதிமுறைகளை முழுமையாக அமல்படுத்தக் கோரி ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஹெல்மெட் விதிமீறலை தடுக்காத காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பைக்கின் பின்னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் ஹெல்மெட் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என காவல் துறை ஆணையருக்கு உத்தரவிட்டு உள்ளனர்.
எடப்பாடியில் ஹெல்மெட் போடாமல் பயணித்த 2 காவலர்கள் உயிரிழந்ததை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பைக் பின்னால் அமர்ந்து செல்வோர் மீது வழக்குப்பதிவு செய்யதாதது ஏன்? என கேள்வி எழுப்பினர்.
மேலும், ஹெல்மெட் உத்தரவு அமல், நடவடிக்கை எடுக்காத காவலர்கள் பற்றி ஜூலை 5-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கை திருப்தி அளிக்காவிட்டால் நடவடிக்கைகள் கடுமையானதாக இருக்கும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர்.