செய்திகள்

தூசி அருகே மாணவன் விஷம் குடித்து தற்கொலை

Published On 2019-06-27 16:44 GMT   |   Update On 2019-06-27 16:44 GMT
தூசி அருகே பள்ளிக்கு செல்லாததை கண்டித்ததால் மனம் உடைந்த மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வெம்பாக்கம்:

தூசி அருகே கீழ்நேத்தப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தசரதன். அவரது மகன் யுவராஜ் (15). இவர் அதே கிராமத்தில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த 24-ந் தேதி அவர் அண்ணி ஜோதி என்பவர் யுவராஜை நீ சரியாக படிக்கவில்லை. சரியாக பள்ளிக்கு செல்லவில்லை என்று கண்டித்ததால் மனம் உடைந்த யுவராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பயிருக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு மயக்கமான நிலையில் கிடந்தார்.

அவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்து, பின்னர் செங்கல்பட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து அவர் உறவினர் கொடுத்த புகாரின்பேரில், தூசி போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் அஜித்குமார் வழக்குப்பதிவு செது விசாரித்து வருகிறார்.
Tags:    

Similar News