செய்திகள்
கபிஸ்தலம் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை
கபிஸ்தலம் அருகே குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அருகே அன்னப்பன்பேட்டை நடுத்தெருவில் வசிப்பவர் விவேக். இவர் வேளாண்துறையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பவித்ரா (வயது 22) இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் உமையாள்புரம் கிராமத்திற்கு சென்றுள்ளனர். அங்கு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த பவித்ரா வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டுவிட்டு மயங்கி கிடந்தார். அவரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பவித்ராவின் தந்தை செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராகவன், வேம்பு, ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவித்ரா திருமணமான மூன்று வருடம் முடிந்துள்ள நிலையில் இறந்தால் வரதட்சணை கொடுமையா? என்று தஞ்சாவூர் ஆர்.டி.ஓ. சுரேஷ் விசாரனை நடத்தி வருகிறார்.
கபிஸ்தலம் அருகே அன்னப்பன்பேட்டை நடுத்தெருவில் வசிப்பவர் விவேக். இவர் வேளாண்துறையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பவித்ரா (வயது 22) இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் உமையாள்புரம் கிராமத்திற்கு சென்றுள்ளனர். அங்கு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த பவித்ரா வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டுவிட்டு மயங்கி கிடந்தார். அவரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பவித்ராவின் தந்தை செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராகவன், வேம்பு, ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவித்ரா திருமணமான மூன்று வருடம் முடிந்துள்ள நிலையில் இறந்தால் வரதட்சணை கொடுமையா? என்று தஞ்சாவூர் ஆர்.டி.ஓ. சுரேஷ் விசாரனை நடத்தி வருகிறார்.