செய்திகள்
நெல்லையில் விஷம் குடித்த வாலிபர் மரணம்
நெல்லையில் ஓட்டல் உரிமையாளர் செல்போன் காணாமல் போனது தொடர்பாக வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள கானார்பட்டி வடக்குத் தெருவை சேர்ந்தவர் ராபின்சன். இவர் ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்து சேலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். அந்த ஓட்டலில் செல்போன் ஒன்று காணாமல் போய் விட்டது.
இதுகுறித்து அந்த ஓட்டல் உரிமையாளர் போலீசில் புகார் செய்தார். இதுபற்றி அங்கு வேலை செய்த ராபின் சன்னிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து ராபின்சன் மன உளைச்சலில் வீட்டிற்கு வந்து விட்டார்.
சம்பவத்தன்று அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை குடித்து விட்டார். அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.