search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்போன் மாயம்"

    • இரும்பு ராடை பிடுங்கி திருப்பி ரமேஷை தாக்கியதாக தெரிகிறது. இதில் 2 பேரும் காயமடைந்தனர்.
    • ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் ஆட்டோ டிரைவர் அம்மாசி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பெத்ததாளாபள்ளியைச் சேர்ந்த அ ம்மாசி (வயது34). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று வடுகம்பட்டியில் உள்ள ஒரு தாபா ஓட்டலில் சாப்பிட சென்றார். அப்போது அவரது செல்போன் திடீரென்று காணவில்லை.

    இதுகுறித்து அந்த தாபா ஓட்டல் உரிமையாளரான தாசிரிபள்ளியை சேர்ந்த ரமேஷ் என்பவரிடம் அம்மாசி கூறினார்.

    அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. பின்னர் இந்த தகராறு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ் அங்கிருந்த இரும்பு ராடை எடுத்து அம்மாசியை தாக்கியுள்ளார். உடனே அவரும் அந்த இரும்பு ராடை பிடுங்கி திருப்பி ரமேஷை தாக்கியதாக தெரிகிறது. இதில் 2 பேரும் காயமடைந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து அம்மாசி கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் ஓட்டல் உரிமையாளர் ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று ஓட்டல் உரிமையாளர் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் ஆட்டோ டிரைவர் அம்மாசி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      
    ×