செய்திகள்

சர்வதேச யோகா தினம் - பள்ளிகளில் மாணவர்கள் யோகா செய்ய அறிவுறுத்தல்

Published On 2019-06-20 12:45 GMT   |   Update On 2019-06-20 12:45 GMT
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அனைத்துப் பள்ளிகளிலும் நாளை மாணவர்கள் யோகா செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
சென்னை:

ஒவ்வொரு ஆண்டு ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என ஆயுஷ் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, நாளை அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள் யோகா செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News