செய்திகள்

கபிஸ்தலம் அருகே குடும்ப தகராறில் பெண் தற்கொலை

Published On 2019-06-19 12:24 GMT   |   Update On 2019-06-19 12:24 GMT
கபிஸ்தலம் அருகே குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கபிஸ்தலம்:

கபிஸ்தலம் அருகே உள்ள வட சருக்கை வடக்கு தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன். பெட்ரோல் பங்கில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அனுசுயா (வயது 22). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த அனுசுயா வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.  

கபிஸ்தலம் போலீசார் அனுசுயா உடலை மருத்துவ பரிசோதனைக்காக குடந்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

இது குறித்து அனுசுயாவின் தாயார் சாந்தலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராகவன், வேம்பு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி மூன்று வருடமே ஆவதால் வரதட்சனை கொடுமையா என கும்பகோணம் ஆர்.டி.ஓ. வீராசாமி தனி விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News