செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு சாலை விபத்தில் 2-பேர் பலி

Published On 2019-06-17 14:43 GMT   |   Update On 2019-06-17 14:43 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே வாகனம் மோதியதில் அடையாளம் தெரியாத வாலிபர் பரிதாபமாக பலியானார்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே ஒரப்பம் கூட்டு ரோடு உள்ளது. இங்கு கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் சாலையை 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி நிற்காமல் சென்றது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கந்திகுப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல்  ராயக்கோட்டை அருகே உள்ள தொட்டதிம்மனஅள்ளி டி.வி.கே. நகரை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 35). கூலி தொழிலாளி. இவர் தனது இருசக்கர வாகனத்தில் ராயக்கோட்டை சென்றுவிட்டு, மீண்டும் தனது வீடு உள்ள டி.வி.கே. நகருக்கு வந்துள்ளார். அவ்வாறு வந்தவர் தனது வீட்டிற்கு திரும்பும்போது, அவ்வழியே வந்த அரசு பேருந்து இவர் மீது மோதியதில், தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். 

இது குறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News