செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே உடலில் காயங்களுடன் விவசாயி மர்ம மரணம்

Published On 2019-06-15 08:57 GMT   |   Update On 2019-06-15 08:57 GMT
ஆண்டிப்பட்டி அருகே உடலில் காயங்களுடன் விவசாயி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே உள்ள பிச்சம்பட்டியைச் சேர்ந்தவர் பிச்சை மணி (வயது 40). விவசாயி. இவரது மனைவி வேலுத்தாய். (34). விவசாயம் கை கொடுக்காத சூழ்நிலையால் பிச்சை மணி தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் தேனி அருகே உள்ள ஜங்கால் பட்டியில் வசித்து வந்தார்.

விவசாய கூலி வேலை பார்த்து வந்த அவருக்கு அங்கும் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வேதனையில் இருந்து வந்தார்.

வீட்டை விட்டு வெளியே சென்ற பிச்சை மணி கண்டமனூர் அண்ணாநகர் பகுதியில் ஒரு பாலத்தின் அடியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் உடலில் காயங்கள் இருந்தது. அவர் பாலத்தில் இருந்து தவறி விழுந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என கண்டமனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News