செய்திகள்
தேனி அருகே வேன் மோதி ராணுவ வீரர் பலி
தேனி அருகே வேன் மோதி ராணுவ வீரர் பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
மதுரை தென்றல் நகர் வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ஜெயக்குமார் (வயது 27). ராணுவ வீரர். இவர் தேனி அருகே சின்னமனூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.
திருமணம் முடிந்து ஊர் திரும்பிக் கொண்டு இருந்தார். கோட்டூர் அருகே வந்த போது திடீரென குறுக்கு சாலையில் இருந்து வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் ஜெயக்குமார் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
அவர் சுதாரித்து எழுந்திருப்பதற்கு முன்பு பின்னால் வேகமாக வந்த வேன் ஜெயக்குமார் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. படுகாயமடைந்த அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.