செய்திகள்

திருப்பூரில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்- கலெக்டர் தகவல்

Published On 2019-06-13 10:13 GMT   |   Update On 2019-06-13 10:13 GMT
திருப்பூரில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பல்லடம் சாலையில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்:

திருப்பூர் கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாளை (14-ந்தேதி) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பல்லடம் சாலையில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும்.

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தனியார்துறை வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டு பயன்தாரர்களை தேர்வு செய்ய வருகை தர இருக்கிறார்கள். அது சமயம் வேலைநாடுபவர்கள் தங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுயதகவல் படிவத்துடன் கலந்து கொள்ளலாம். வேலையளிப்போரும் தங்களுக்கு தேவையான காலியிடங்களை நிரப்பிட தங்கள் வருகையை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

அதனால் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமிற்கு வரும்போது தங்களது பதிவில் குறைகள் கண்டறியப்பட்டால், அதனை சரிசெய்து கொள்ளலாம். புதுப்பித்துக்கொள்ளலாம். கூடுதல் கல்வி பதிவு செய்து கொள்ளலாம். தகுதியிருப்பின் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை விண்ணப்பம் பெற்று உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

தனியார் துறைகளில் வேலையில் சேருவதால் தங்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் இரத்து செய்யப்படமாட்டாது. இப்பணி முற்றிலும் இலவசமானது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News