search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பூர் கலெக்டர்"

    • பொது மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
    • பெண்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் அடுத்துள்ள பூமலூர் கோகுல் கார்டன் பகுதியை சேர்ந்த பொது மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    அப்போது திடீரென தங்கள் பகுதிக்கு மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர கோரி தாங்கள் கொண்டு வந்த விளக்குகளை ஏற்றி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அதனை தடுத்து நிறுத்தினர். இதில் பெண்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    பூமலூர் ஊரட்சிக்கு உட்பட்ட பூமலூர் கிராமம் கோகுல் கார்டன் பகுதியில் 250 குடும்பங்கள் வசித்து வருகிறோம். கடந்த 3 ஆண்டுகளாக கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்றத்தலைவரிடம் அடிப்படை வசதிகளான குடிநீர், தெரு மின்விளக்கு, சாக்கடை வசதி செய்து தரக்கோரி மனு கொடுக்கப்பட்டுள்ளது.

    ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொது மக்களின் இந்த கோரிக்கையை ஏற்று எங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.

    • இனிமேல் தொந்தரவு செய்தால் உன்னுடைய நிர்வாண புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவோம் என்று மிரட்டினர்.
    • வெங்கடேசன், கார்த்திகா மற்றும் வெங்கடேசனின் பெற்றோர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் இடுவம்பாளையம் கரட்டுத் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தனலெட்சுமி (வயது 24). இவர் இன்று திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2019 ம் ஆண்டு மூர்த்தி என்பவருடன் எனக்கு திருமணம் நடைபெற்றது. எனக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் எனக்கும் மூர்த்திக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகிறோம். இந்த நிலையில் ராணுவத்தில் பணியாற்றி வரும் உறவினரான தேனியை சேர்ந்த வெங்கடேசன் ( 25) என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் நெருக்கமாக பழகி வந்தோம்.

    நேரில் என்னை சந்தித்த வெங்கடேசன் என்னை திருமணம் செய்து கொள்வதாகவும், எனது குழந்தையை பார்த்து கொள்வதாகவும் கூறி உல்லாசத்துக்கு அழைத்தார். நான் மறுக்கவே வலுக்கட்டயமாக என்னுடன் உறவு வைத்துக் கொண்டார். அப்போது செல்போனில் புகைப்படம் எடுத்து விட்டார். நான் வெங்கடேசனுடன் பழகி வருவது எங்கள் வீட்டில் தெரிந்து விட்டது.

    இதையடுத்து வெங்கடேசனிடம் என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டதற்கு தற்போதைக்கு வேண்டாம் எனக்கூறி மறுத்து வந்தார். தொடர்ந்து என்னை உடலுறவுக்கு வற்புறுத்தி அழைத்து வந்தார். ஆனாலும் நான் அதற்கு மறுக்கவே அவரது செல்போனில் எடுத்து வைத்திருந்த என்னுடைய புகைப்படங்களை காட்டி உடலுறவுக்கு அழைத்தார். மறுத்தால் என்னுடைய நிர்வாண புகைப்படங்களை இணையதளத்திலும், வாட்ஸ்அப்பிலும் பகிர்ந்து விடுவதாக கூறி என்னை மிரட்டினார். பயந்து போன நான் அவருடன் வலுக்கட்டாயமாக உடலுறவில் இருந்து வந்தேன். இதனால் நான் கடந்த மார்ச் மாதம் கருத்தரித்தேன். இது குறித்து நான் வெங்கடேசனிடம் கூறியதற்கு என்னுடைய கருவை கலைக்குமாறு கூறினார். ஆனால் நான் அதற்கு மறுத்துவிட்டேன்.

    இந்தநிலையில் வெங்கடேசன் கோவையில் உள்ள அவரது தோழி கார்த்திகா என்பவர் என்னை சந்திக்க வந்துள்ளதாக கூறியதன் பேரில் கடந்த 29-3-23 அன்று நான் கார்த்திகாவை திருப்பூரில் வைத்து சந்தித்தேன். அப்போது நாங்கள் ஜூஸ் குடிக்க சென்ற போது எனக்கு தெரியாமல் ஏற்கனவே கொண்டு வந்திருந்த கருக்கலைப்பு மாத்திரையை ஜூஸ்சில் கலந்து கொடுத்து குடிக்க வைத்தார்.

    இதனால் அடுத்தநாள் எனது கரு கலைந்து விட்டது. கார்த்திகா எனக்கு போன் செய்து நான்தான் வெங்கடேசனின் பேச்சை கேட்டு ஜூஸ்சில் கரு கலைப்பு மாத்திரை கலந்து கொடுத்தேன் என்றார். இது பற்றி வெங்கடேசனிடம் கேட்ட போது நான் ஒரு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய உள்ளேன். நீ கர்ப்பமாக இருந்தால் எனக்குதான் பிரச்சினை என்று கூறி பேசுவதை தவிர்த்தார். நான் தொலைபேசியில் அழைத்து பேச முயற்சித்த போது எனது செல்போன் எண்ணை பிளாக் செய்து விட்டார்.

    கடந்த 5-4-23 அன்று வெங்கடேசனின் பெற்றோர் என்னை நேரில் சந்திக்க வந்தனர். அப்போது இனிமேல் எனது மகனிடம் பேசவோ, பழகவோ கூடாது. அவனுக்கு நல்ல இடத்தில் வசதியான பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்கப்போகிறோம். இனிமேல் எனது மகனை தொந்தரவு செய்தால் உன்னுடைய நிர்வாணப் புகைபடங்களை இணையதளத்தில் வெளியிடுவோம் என்று மிரட்டினர்.

    இதுகுறித்து மகளிர் போலீசில் புகார் செய்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வெங்கடேசன், கார்த்திகா மற்றும் வெங்கடேசனின் பெற்றோர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

    • விசர்ஜனம் செய்ய தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    • காவல் துறையினரால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்ய வேண்டும்.

    திருப்பூர் :

    விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு பொது இடங்களில் தற்காலிகமாக விநாயகர் சிலைகள் நிறுவி வழிபாடு செய்யும் இடங்களில்சிலைகள் நிறுவுவதற்கு கடைபிடிக்கப்பட வேண்டிய நடைமுறைகளை மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு பொது இடங்களில் தற்காலிகமாக விநாயகர் சிலைகள் நிறுவி வழிபாடு செய்யும் இடங்களில் சிலைகள் நிறுவுவதற்கு கடைபிடிக்கப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து 9.8.2018 நாளிட்ட பொது (சட்டம்(ம) ஒழுங்கு -B) துறையால் வெளியிடப்பட்ட அரசாணையின் படி தொடர்புடைய துறைகளில் பெறப்பட வேண்டிய ஆட்சேபணையின்மை கடிதத்துடன் மாநகர பகுதிகளில் அந்தந்த உதவி காவல் ஆணையர்களிடமும், ஊரக பகுதிகளில் அந்தந்த வருவாய் கோட்டாட்சியர்களிடமும் விண்ணப்பித்து முன் அனுமதி பெற்ற பின்னர் சிலைகள் நிறுவப்பட வேண்டும். மேலும் நிறுவப்படும் சிலைகள் களிமண்ணால் ஆனதாகவும், இயற்கை வண்ணக் கலவை கொண்டு வண்ணம் பூசப்பட்டவைகள் மட்டும் இருந்திட வேண்டும்.

    எனவே, விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு பொது இடங்களில் தற்காலிகமாக விநாயகர் சிலைகள் நிறுவி வழிபாடு செய்யும் பொதுமக்கள் அமைப்பினர்கள் உரிய படிவத்தினை தொடர்புடைய காவல் உதவி ஆணையர் அலுவலகங்கள், மற்றும் ஊரக பகுதிகளில் அந்தந்த வருவாய் கோட்டாட்சியர்கள் அலுவலகங்களிலும் பெற்று உரிய முறையில் விண்ணப்பித்து முன் அனுமதி பெற்று சிலைகள் நிறுவிட வேண்டும் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    மேலும் சிலைகள் வைத்து வழிபட அளிக்கப்படும் விண்ணப்பம் வருவாய் கோட்டாட்சியர் - உதவி காவல் ஆணையர்களால் நிராகரிப்பு செய்யப்படும் இடங்களில் மேல்முறையீட்டு விண்ணப்பத்தை முறையே திருப்பூர் மாவட்ட கலெக்டர் மற்றும் காவல் ஆணையர் ஆகியோரிடம் அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்கள்- அமைப்புகளால் நிறுவப்படும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத சிலைகள் மட்டும் கீழ்கண்ட இடங்களில் விசர்ஜனம் செய்ய தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    1. சாமளாபுரம் குளம்.2. ஆண்டிபாளையம், பி.ஏ.பி வாய்க்கால்.3. பொங்கலூர்,பி.ஏ.பி வாய்க்கால். 4. எஸ்.விபுரம், பி.ஏ.பி வாய்க்கால். 5. கெடிமேடு, பி.ஏ.பி வாய்க்கால். 6. எஸ்.வி.புரம் வாய்க்கால்.7. கணியூர், அமராவதி ஆறு.எனவே மேற்கண்ட இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்யவும், மேலும் காவல் துறையினரால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்யும் பொருட்டு எடுத்துச் செல்லுமாறும் பொதுமக்கள்- அமைப்புகள் ஆகியோர்களுக்கு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • குட்டையை பார்வையிட்ட கலெக்டர் இந்த குட்டையில் மழைநீர் தேங்குவதன் மூலம் சுற்றுவட்டாரங்களில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்வதால் பாசனப்பரப்பை அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகும் என்று கூறினார்.
    • உடுமலை வட்டாரம் மானுப்பட்டியில் பட்டு வளர்ச்சித் துறை மூலம் ரூ.1 கோடியே 28 லட்சம் மதிப்பில் அரசு நிதி உதவியுடன் தனியார் மூலம் தானியங்கி பட்டு நூல் நூற்பகம் தொடங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    உடுமலை வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் பட்டு வளர்ச்சித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் வினீத் ஆய்வு மேற்கொண்டார்.

    உடுமலை வட்டாரம் மானுப்பட்டியில் பட்டு வளர்ச்சித் துறை மூலம் ரூ.1 கோடியே 28 லட்சம் மதிப்பில் அரசு நிதி உதவியுடன் தனியார் மூலம் தானியங்கி பட்டு நூல் நூற்பகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்துக்கு அரசு மானிய மாக ரூ.96 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த பட்டு நூல் நூற்பகத்தில் மாவட்ட கலெக்டர் வினீத் திடீர் ஆய்வு மேற் கொண்டார். அப்போது நிறுவனத்தின் பட்டு நூல் உற்பத்தி வழிமுறைகள், விற்பனை வாய்ப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் இதே கிராமத்தில் பட்டு வளர்ச்சித்துறை மூலம் நடவு மானியமாக ரூ.23 ஆயிரத்து 625 பெற்று அமைக்கப்பட்டுள்ள மல்பெரித் தோட்டம், ரூ.52 ஆயிரத்து 500 மதிப்பி லான இலவசத் தளவாடங்கள் மற்றும் ரூ. 87 ஆயிரத்து 500 மானிய உதவியுடன் அமைக்கப்பட்ட புழு வளர்ப்பு மனை ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டார்.

    கலைஞரின் அனைத்து கிராம் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் ஆண்டியக்கவுண்டனூர் ஊராட்சிக்குட் பட்ட பெரிசினம்பட்டி குட்டை 5 ஏக்கர் பரப்பளவில் ரூ.30 ஆயிரத்து 900 மதிப்பீட்டில் வேளாண் பொறியியல் துறையின் எந்திரங்களைக் கொண்டு தூர் வாரப்பட்டுள்ளது.

    அந்த குட்டையை பார்வையிட்ட கலெக்டர் இந்த குட்டையில் மழைநீர் தேங்குவதன் மூலம் சுற்றுவட்டாரங்களில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்வதால் பாசனப்பரப்பை அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகும் என்று கூறினார்.

    இந்த ஆய்வின்போது வேளாண்மைத்துறையின் நேர்முக உதவியாளர் மகாதேவன், உடுமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தேவி, பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக் குனர் மனீஷா, வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் முத்துராமலிங்கம், வேளாண்மை அலுவலர், துணை வேளாண்மை அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    ×