என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லாரி ஸ்டிரைக் எதிரொலி- அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க செய்ய வேண்டும் - கலெக்டர் அறிவுரை
Byமாலை மலர்24 July 2018 4:24 PM GMT (Updated: 24 July 2018 4:24 PM GMT)
லாரிகள் ஸ்டிரைக்கால் அத்தியாவசிய பொருட்கள் எவ்வித தங்குதடையுமின்றி பொதுமக்களுக்கு கிடைத்திட அனைத்து அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
திருப்பூர்:
திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் லாரிகள் பொது வேலை நிறுத்தத்தினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் பழனிசாமி தலைமை வகித்தார்.
லாரி ஸ்டிரைக்யையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தை அலுவலர்களும் விவசாயிகளுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தி உற்பத்தி செய்யும் அனைத்து காய்கறிகளையும் உழவர் சந்தைக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யவேண்டும். அதே போன்று அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையினை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
திருப்பூர் மாவட்டத்திற்கு மகாராஷ்ரா மாநிலத்திலிருந்து வரும் வெங்காயத்தை போலீஸ் கண்காணிப்புடன் கொண்டு வர வேளாண் வணிகத்துறை ஏற்பாடு செய்யவேண்டும். வேளாண் துணை இயக்குநர், வேளாண் வணிகம், தன்வசம் உள்ள அரசுத்துறை வாகனங்களை நீலகிரியிலிருந்து மலைக்காய்கறிகளை தங்குடையின்றி திருப்பூர் மாவட்டத்திற்கு கொண்டுவர ஏற்பாடு செய்து தரவேண்டும். உழவர் சந்தை நிர்வாக அலுவலர்கள் கூடுதல் வாகனம் தேவைப்படின் உடனடியாக வட்டார போக்குவரத்து அலுவலரை தொடர்பு கொண்டு விவசாயிகள் காய்கறிகளை சிரமமின்றி கொண்டுவர பஸ் ஏற்பாடு செய்து கொடுத்திட வேண்டும்.
மேலும், பொது விநியோக திட்டத்தின்கீழ் அத்தியாவசிய பொருட்கள் வரத்து மற்றும் விநியோகத்திற்கு கொண்டு செல்லுதல் ஆகிய பணிகள் தங்கு தடையின்றி நடைபெற்று வருவதை மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் அவர்கள் உறுதிபடுத்திட வேண்டும். இதனைத் தொடர்ந்து காண்காணித்து எந்தவித விடுபாடுமின்றி நுகர்வோருக்கு இடுபொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மண்டல மேலாளருக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
காவல்துறை ஊரகம் மற்றும் நகரப்பகுதிகளில் போதிய பாதுகாப்பு அளித்து வாகனங்கள் எந்த இடையூறுமின்றி இயக்க ஏற்பாடு செய்து தரவேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலர் 10 டன்னுக்கு உட்பட்ட சரக்கு வண்டி உரிமையாளர்கள் பிரதிநிதிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து கூட்டம் நடத்தி வாகனம் தேவைப்படும் பகுதிகளுக்கு வாகனங்களை அனுப்ப ஏற்பாடு செய்து எரிபொருட்கள், காய்கறிகள் உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களும் எவ்வித தங்குதடையுமின்றி பொதுமக்களுக்கு கிடைத்திட அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் லாரிகள் பொது வேலை நிறுத்தத்தினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் பழனிசாமி தலைமை வகித்தார்.
லாரி ஸ்டிரைக்யையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தை அலுவலர்களும் விவசாயிகளுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தி உற்பத்தி செய்யும் அனைத்து காய்கறிகளையும் உழவர் சந்தைக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யவேண்டும். அதே போன்று அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையினை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
திருப்பூர் மாவட்டத்திற்கு மகாராஷ்ரா மாநிலத்திலிருந்து வரும் வெங்காயத்தை போலீஸ் கண்காணிப்புடன் கொண்டு வர வேளாண் வணிகத்துறை ஏற்பாடு செய்யவேண்டும். வேளாண் துணை இயக்குநர், வேளாண் வணிகம், தன்வசம் உள்ள அரசுத்துறை வாகனங்களை நீலகிரியிலிருந்து மலைக்காய்கறிகளை தங்குடையின்றி திருப்பூர் மாவட்டத்திற்கு கொண்டுவர ஏற்பாடு செய்து தரவேண்டும். உழவர் சந்தை நிர்வாக அலுவலர்கள் கூடுதல் வாகனம் தேவைப்படின் உடனடியாக வட்டார போக்குவரத்து அலுவலரை தொடர்பு கொண்டு விவசாயிகள் காய்கறிகளை சிரமமின்றி கொண்டுவர பஸ் ஏற்பாடு செய்து கொடுத்திட வேண்டும்.
மேலும், பொது விநியோக திட்டத்தின்கீழ் அத்தியாவசிய பொருட்கள் வரத்து மற்றும் விநியோகத்திற்கு கொண்டு செல்லுதல் ஆகிய பணிகள் தங்கு தடையின்றி நடைபெற்று வருவதை மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் அவர்கள் உறுதிபடுத்திட வேண்டும். இதனைத் தொடர்ந்து காண்காணித்து எந்தவித விடுபாடுமின்றி நுகர்வோருக்கு இடுபொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மண்டல மேலாளருக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
காவல்துறை ஊரகம் மற்றும் நகரப்பகுதிகளில் போதிய பாதுகாப்பு அளித்து வாகனங்கள் எந்த இடையூறுமின்றி இயக்க ஏற்பாடு செய்து தரவேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலர் 10 டன்னுக்கு உட்பட்ட சரக்கு வண்டி உரிமையாளர்கள் பிரதிநிதிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து கூட்டம் நடத்தி வாகனம் தேவைப்படும் பகுதிகளுக்கு வாகனங்களை அனுப்ப ஏற்பாடு செய்து எரிபொருட்கள், காய்கறிகள் உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களும் எவ்வித தங்குதடையுமின்றி பொதுமக்களுக்கு கிடைத்திட அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X