செய்திகள்
திருவாரூர் அருகே விபத்தில் விவசாயி பலி
திருவாரூர் அருகே விபத்தில் விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்:
கொரடாச்சேரி அருகே கமுகக்குடியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 50). விவசாயி. இவர் சம்பவத்தன்று அபிவிருத் தீஸ்வரம் அருகே கொரடாச்சேரி-குடவாசல் மெயின்ரோட்டில் நடந்து சென்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி படுகாயம் அடைந்தார்.
வடிவேலினை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வடிவேல் இறந்தார்.
இதுகுறித்து வடிவேலின் மனைவி புஷ்பவள்ளி கொரடாச்சேரி போலீசில் புகார் கொடுத்தார். சப்- இன்ஸ்பெக்டர் ராஜி வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.