செய்திகள்
அண்ணா சதுக்கத்தில் கொள்ளையர்கள் 4 பேர் கைது
அண்ணா சதுக்கத்தில் கொள்ளையர்கள் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை அண்ணா சதுக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் சிக்கந்தர் (19), வினோத் (19), தமீம் (23), பாலாஜி (20). இவர்கள் 4 பேரும் கடந்த பல நாட்களாக திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து 4 பேரையும் அண்ணா சதுக்கம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.