செய்திகள்
தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
வெப்ப சலனம் மற்றும் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நாமக்கல், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். அப்போது 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அனல் காற்று வீசும்.
நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தின்படி, வேலூர் மாவட்டம் திருப்பத்தூர், சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தலா 2 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. கோவை மாவட்டம் வால்பாறை, நீலகிரி மாவட்டம் ஜி பஜாரில் தலா 1 செ.மீ. மழை பெய்து உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
வெப்ப சலனம் மற்றும் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நாமக்கல், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். அப்போது 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அனல் காற்று வீசும்.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தின்படி, வேலூர் மாவட்டம் திருப்பத்தூர், சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தலா 2 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. கோவை மாவட்டம் வால்பாறை, நீலகிரி மாவட்டம் ஜி பஜாரில் தலா 1 செ.மீ. மழை பெய்து உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.