செய்திகள்

குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் பெண் உள்பட 2 பேர் தற்கொலை

Published On 2019-05-18 10:32 GMT   |   Update On 2019-05-18 10:32 GMT
குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:

களியக்காவிளையை அடுத்த படந்தாலுமூடு பகுதியை சேர்ந்தவர் அப்பு குட்டன். இவரது மனைவி அன்னம்மாள் (வயது 59).

இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து பல்வேறு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அவருக்கு நோய் குணமாகவில்லை. இதனால் மன வேதனையுடன் காணப்பட்டு வந்த அன்னம்மாள் சம்பவத்தன்று வி‌ஷம் குடித்து வீட்டில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக் கிடந்தார்.

அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து களியக்காவிளை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சொர்ணலதா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்...

களியக்காவிளை அதங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின் (33). தொழிலாளி. இவர் குடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துவந்தார். இதனால் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு பிரிந்து வாழ்த்து வருகின்றனர்.

இதனால் மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்த ஸ்டாலின் சம்பவத்தன்று வி‌ஷம் குடித்து வீட்டின் அருகே மயங்கிக்கிடந்தார். இதைப்பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று ஸ்டாலின் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து களியக்காவிளை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சொர்ணலதா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News