செய்திகள்

கூடலூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல் - 2 வாலிபர்கள் பலி

Published On 2019-05-18 10:03 GMT   |   Update On 2019-05-18 10:03 GMT
கூடலூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக பலியானார்கள்.

கூடலூர்:

கூடலூர் கிருஷ்ணசாமி கவுண்டர் தெருவை சேர்ந்தவர் ராஜா மகன் ஆனந்தகுமார் (வயது25). இவர் தனது நண்பர் தங்கம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கம்பத்தில் இருந்து கூடலூருக்கு வந்து கொண்டிருந்தார்.

கூடலூர் காஞ்சிமரத்துரை வெட்டுக்காடு பகுதியை சேர்ந்த நாகேந்திரன் (17) என்பவர் தனது நண்பர் ஆதேசுடன் மற்றொரு மோட்டார் சைக்கிளில் கூடலூரில் இருந்து கம்பம் நோக்கி வந்துகொண்டிருந்தார். தேசிய நெடுஞ்சாலையில் துர்க்கை அம்மன் கோவில் அருகே வந்த போது 2 மோட்டார் சைக்கிளும் பயங்கரமாக மோதிக்கொண்டன.

இதில் ஆனந்தகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த நாகேந்திரன் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் தங்கம், ஆதேஸ் ஆகியோர் படுகாயங்களுடன் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பொன்னிவளவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags:    

Similar News