செய்திகள்

நந்தியம்பாக்கம் தனியார் ஊழியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

Published On 2019-05-10 10:49 GMT   |   Update On 2019-05-10 10:49 GMT
மீஞ்சூரை அடுத்த நந்தியம்பாக்கத்தில் தனியார் ஊழியர் வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த நந்தியம் பாக்கத்தை சேர்ந்தவர் ஏஜாஸ் முகைதீன் (வயது 50). தனியார் கம்பெனி ஊழியர். இன்று அதிகாலை 3 மணிக்கு மசூதிக்கு தொழுகைக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பிய போது கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. பீரோவில் இருந்த 4 பவுன் நகை. ரூ. 10 ஆயிரம் ரொக்கம், விலை உயர்ந்த 3 செல்போன்கள் திருடுபோனது தெரியவந்தது.

கொள்ளையர்கள் சிம் கார்டை கழற்றி கட்டிலில் வைத்து விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகிறாகள்.

Tags:    

Similar News