செய்திகள்

பொன்னேரி அருகே கத்தியை காட்டி பணம் பறித்தவர் கைது

Published On 2019-05-08 07:14 GMT   |   Update On 2019-05-08 07:14 GMT
பொன்னேரி அருகே கத்தியை காட்டி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொன்னேரி:

பொன்னேரியை அடுத்த ஏலியம்பேட்டையை சேர்ந்தவர் பூபாலன் (வயது 28). இவர் பொன்னேரி புதுவாயல் சாலையில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பதாக பொன்னேரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் வந்தது.

இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் அங்கு சென்று பூபாலனை பிடித்து சிறையில் அடைத்தார். கைதான பூபாலன் மீது ஏற்கனவே திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளன.

Tags:    

Similar News