search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணம் கைது"

    • அலமேலு, அலெக்ஸிடம் இருந்த பணம் மற்றும் கை செயினை மீட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன்-மனைவி இருவரையும் கைது செய்தனர்.

    சமயபுரம்:

    மலேசியாவை சேர்ந்தவர் சந்திரன் (வயது 52). இவர் தனது மனைவி வனிதா, மகள் பிரிதிகா. சந்திரன் மகள் பிரிதிகாவின் சிகிச்சைக்காக உறவினர்கள் 3 பேருடன் பாண்டிச்சேரி செல்ல திட்டமிட்டார். இதற்காக நேற்று அதிகாலை அவர்கள் திருச்சி வந்தனர்.

    காலை 6 மணியளவில் சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்துவிட்டு பின் சமயபுரம் அருகே உள்ள அக்கரைபட்டி சாய்பாபா கோவிலில் தரிசனம் செய்ய சென்றனர். பின்னர் சமயபுரம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பிரபல தனியார் ஓட்டலில் சாப்பிட சென்றனர்.

    அப்போது சந்திரன் கையில் இருந்த பையை மறந்து ஓட்டலில் விட்டு சென்றார். சந்திரன் குடும்பத்தினர் காரைக்குடி அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற போது கையில் இருந்த பையை காணதால் அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து அவர்கள் காரைக்குடியில் இருந்து மீண்டும் சமயபுரத்தில் உள்ள ஓட்டலுக்கு வந்து விசாரித்தனர். அப்போது இந்த உணவகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்யப்பட்டது. அதில் அந்த உணவகத்தில் துப்புரவு பணியாளர் அலமேலு(34) என்பவர் சந்திரனின் கைப்பையை எடுத்து சென்ற காட்சி பதிவாகி இருந்தது.

    இதனை அடுத்து சமயபுரம் போலீசார் அலமேலுவிடம் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அலமேலு கைபையை எடுத்து தன் கணவர் அலெக்சிடம் கொடுத்து அதில் உள்ள வெளிநாட்டு பணம் மற்றும் நகையினை எடுத்ததை ஒப்புக் கொண்டார்.

    இதை தொடர்ந்து அலமேலு, அலெக்ஸிடம் இருந்த பணம் மற்றும் கை செயினை மீட்டனர். பாஸ்போர்ட்டுகளை தான் எரித்து விட்டதாக போலீ சாரிடம் தெரிவித்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன்-மனைவி இருவரையும் கைது செய்தனர்.

    • கொள்ளையில் ஈடுபட்டவர்களின் உருவங்கள் பதிவாகியிருந்தது. அதனடிப்படையில் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர்.
    • போலீசார் கைது செய்து விருதுநகர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    திருச்சுழி:

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி குண்டாற்று காட்டு பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் கடந்த ஏப்ரல் மாதம் 22-ந்தேதி ரம்ஜான் பண்டிகை விடுமுறை தினத்தையொட்டி மது வாங்குவதற்காக மதுப்பிரியர்கள் கூட்டம் அலைமோதியது.

    இதனை நோட்டமிட்ட மர்மகும்பல், டாஸ்மாக் விற்பனை நேரம் முடிந்து ஊழியர்கள் பணத்தை எண்ணிக்கொண்டிருந்த போது கடைக்குள் புகுந்து, வீச்சரிவாள், வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி ஊழியர்களிடமி ருந்து ரூ.6லட்சத்து 47ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

    கொள்ளையர்கள் வெட்டியதில் காயமடைந்த டாஸ்மாக் ஊழியர்கள் 3பேர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

    கொள்ளையர்களை அடையாளம் காண சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவை கைப்பற்றி, அதில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அதில் கொள்ளையில் ஈடுபட்டவர்களின் உருவங்கள் பதிவாகியிருந்தது. அதனடிப்படையில் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா மேலாயூர் பகுதியை சேர்ந்த தர்ஷிக் சரண்(வயது 19) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    அவரிடம் மற்ற கொள்ளையர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த தகவலில் பேரில் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 3-க்கும் மேற்பட்டோரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய சிவகங்கை மாவட்டம் கீழக்கண்டனி பகுதியை சேர்ந்த ராஜபாண்டி என்பவர் தனிப்படை போலீசாரிடம் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்து விருதுநகர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×