செய்திகள்

காரமடை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, பொருட்கள் திருட்டு

Published On 2019-05-07 11:41 GMT   |   Update On 2019-05-07 11:41 GMT
காரமடை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பொருட்கள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை:

காரமடை அருகே உள்ள மாங்கரை புதூரை சேர்ந்தவர் ஜோசப் பெனடிக்ட். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் கோவையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தார். பின்னர் மாலையில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. அதிர்ச்சியடைந்த ஜோசப் பெனடிக்ட் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். வீட்டின் அறையில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது.

பீரோவை திறந்து பார்த்த போது அதில் அருந்த 7 பவுன் தங்க நகைகள், செல்போன், வாட்ச் ஆகியவை உள்பட ரூ. 80 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து ஜோசப் பெனடிக்ட் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News