செய்திகள்

சோழவந்தான் அருகே வாகனம் மோதி வாலிபர் பலி

Published On 2019-05-06 10:30 GMT   |   Update On 2019-05-06 10:30 GMT
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வாலிபர் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
சோழவந்தான்:

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் கிராமத்தைச்சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மணிகண்டன் (வயது28).

இவர் பரவையில் உள்ள தனியார் குடிநீர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று இரவு வேலையை முடித்து விட்டு மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் மதன் குமார், அருண்குமார், தீபக் ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டனர்.

சோழவந்தான்-நகரி ரோட்டில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அங்குள்ள 2-வது வளைவில் சென்றபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

படுகாயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மதன்குமார், அருண்குமார், தீபக் ஆகியோரை அப்பகுதியினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு 3 பேரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News