ஆண்டிப்பட்டி அருகே கோவில் திருவிழாவில் வாலிபருக்கு கத்திக்குத்து
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்படடி அருகே உள்ள வண்ணாத்திபாறை கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் திருப்பதி (வயது 59). இவரது தம்பி ராஜா (42) ஆகியோர் குடும்பத்தினருடன் அப்பகுதியில் நடந்த மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு சென்றனர்.
அப்போது சிறைப் பாறையைச் சேர்ந்த வினோத் (28) என்பவர் திருவிழாவுக்கு வந்தவர்களை குடிபோதையில் கேலி கிண்டல் செய்து கொண்டு இருந்தார். இதனை ராஜா தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த வினோத் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜாவை குத்த முயன்றார். இதை திருப்பதி தடுக்க முயலும் போது அவரது கை மற்றும் வலது தொடையில் கத்திக்குத்து விழுந்தது.
உடனே அருகில் இருந்தவர்கள் திருப்பதியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து வினோத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.