என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கேலி கிண்டல்"
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுக்கா வீரகனூர் ஊரில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள். காலை 7 மணி முதலே மாணவிகள் வர தொடங்கி விடுவார்கள் மீண்டும் மாலை 5 மணியிலிருந்து ஆறு மணிவரை மாணவிகள் பள்ளி விட்டு சென்று விடுகிறார்கள்.
இந்த பள்ளியில், காலையில் மாணவிகள் பள்ளிக்கு வரும்போது சில இளைஞர்களும், மாணவர்களும் ஆண்கள் பள்ளியின் சுவர்களின் மீது ஏறிக்கொண்டு அசிங்கமான வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்கின்றனர். மேலும் ரோட்டில் வரும் போதும் சிலர் கேலி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை பார்த்து செல்லும் பொதுமக்களுக்கு முகச் சுளிப்பு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் அரசு பள்ளி மீது அவ நம்பிக்கையும் ஏற்படுகிறது.
எனவே வீரகனூர் காவல்துறை ஆய்வாளர் பள்ளியில் புகார் பெட்டி முறையை அமல்படுத்தி மாணவிகளின் குறைகளை தெரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்