செய்திகள்

போடி அருகே குடும்ப தகராறில் தாயை குத்தி கொல்ல முயன்ற மகன் கைது

Published On 2019-05-02 17:33 GMT   |   Update On 2019-05-02 17:33 GMT
போடி அருகே குடும்ப தகராறில் தாயை குத்தி கொல்ல முயன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

மேலசொக்கநாதபுரம்:

போடி துரைராஜபுரம் காலனியை சேர்ந்த முனியாண்டி மகன் ஈஸ்வரன் (வயது 40). ஜவுளி வியாபாரி. இவரது மனைவி பழனிமுத்து. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

ஈஸ்வரன் ஜவுளி வியாபாரத்திற்காக அடிக்கடி வெளியூர் சென்று விடுவது வழக்கம் அப்போது பழனிமுத்துவுக்கும், அவரது மாமியார் தனம் என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பழனி முத்து கோபித்துக்கொண்டு பொம்மிநாயக்கன் பட்டியில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார்.

மேலும் இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார். விசாரணைக்காக ஈஸ்வரனை போலீசார் வரச்சொல்லியிருந்தனர். ஈஸ்வரன் போலீஸ் ஸ்டேசனுக்கு செல்வதற்காக தனது தாயாரை அழைத்தார். உன்னால் தான் என் மனைவி கோபித்துக் கொண்டு சென்றுவிட்டார்.

போலீஸ் நிலையத்திற்கு சென்று அவரை அழைத்து வரலாம் என்றார். ஆனால் தனம் வர மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஈஸ்வரன், அருகில் இருந்த கத்தியை எடுத்து தனது தாய் என்றும் பார்க்காமல் பல இடங்களில் குத்தினார். இதில் மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் போடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்த ஈஸ்வரனை கைது செய்தனர்.

Tags:    

Similar News