செய்திகள்

கும்பகோணம் அருகே தீக்குளித்து தொழிலாளி தற்கொலை

Published On 2019-04-29 12:13 GMT   |   Update On 2019-04-29 12:13 GMT
கும்பகோணம் அருகே தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கும்பகோணம்:

கும்பகோணம் அருகே அண்ணலக்ரகாரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 46). தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டது. இந்நிலையில் மனமுடைந்த மோகன் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மோகன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News