செய்திகள்

ராஜபாளையம் அருகே வாலிபரை கொன்று கிணற்றில் உடல் வீச்சு - 2 பேர் கைது

Published On 2019-04-29 11:58 GMT   |   Update On 2019-04-29 11:58 GMT
ராஜபாளையம் அருகே வாலிபரை கொன்று கிணற்றில் உடலை வீசிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்:

ராஜபாளையம் அருகே உள்ள நக்கனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கி (வயது 34). இவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தார். தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர்.

விசாரணையில், சம்பவத்தன்று இசக்கி குடிபோதையில் இருந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (24), முனீஸ்வரன் (28) ஆகியோரும் மது குடித்துவிட்டு வந்து இசக்கியிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. இதில் இசக்கியை, 2 பேரும் கொலை செய்து உடலை கிணற்றில் வீசியுள்ளனர் என தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News