மாம்பலத்தில் ரெயிலில் அடிபட்டு சிறுவன் பலி
சென்னை:
தாம்பரம் அருகே உள்ள மாடம்பாக்கத்தை சேர்ந்தவர் அருண்கோயில். இவரது மகன் ஆதித்யா (9). நேற்று விடுமுறை நாள் என்பதால் அருண்கோயில் அவரது மனைவி ஆகியோர் ஆதித்யாவையும் அழைத்துக் கொண்டு தி.நகருக்கு பொருட்கள் வாங்க வந்தனர்.
பொருட்கள் வாங்கி விட்டு திரும்பி செல்வதற்காக மாம்பலம் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலுக்காக காத்திருந்தனர். அப்போது சிறுவன் ஆதித்யா பிளாட் பாரத்தில் அங்கும் இங்கும் ஓடியபடி விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது மின்சார ரெயில் வந்ததை கவனிக்காமல் தவறி விழுந்தான். இதில் ரெயிலில் அடிபட்டு உடல் நசுங்கி இறந்தான்.
தங்கள் கண் முன்னாலேயே மகன் இறந்ததை பார்த்து அருண் கோயிலும், அவரது மனைவியும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
தகவல் அறிந்ததும் எழும்பூர் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.