செய்திகள்
குனியமுத்தூர் அருகே கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை
கோவை குனியமுத்தூர் அருகே கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள கோவைபுதூர் பிரிவு இ.பி.காலனியை சேர்ந்தவர் கங்காதரன். இவரது மகள் அஸ்வினி (வயது 18). இவர் கே.ஜி.சாவடியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று வீட்டில் இருந்த அஸ்வினி வழக்கம் போல இரவு உணவு சாப்பிட்டு விட்டு தூங்குவதற்காக சென்றார். இன்று காலையில் நீண்ட நேரம் ஆகியும் அறையில் இருந்து அவர் வெளியே வரவில்லை. சந்தேகம் அடைந்த பெற்றோர் சென்று பார்த்தனர். அப்போது அறையில் அஸ்வினி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட அஸ்வினியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஸ்வினி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள கோவைபுதூர் பிரிவு இ.பி.காலனியை சேர்ந்தவர் கங்காதரன். இவரது மகள் அஸ்வினி (வயது 18). இவர் கே.ஜி.சாவடியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று வீட்டில் இருந்த அஸ்வினி வழக்கம் போல இரவு உணவு சாப்பிட்டு விட்டு தூங்குவதற்காக சென்றார். இன்று காலையில் நீண்ட நேரம் ஆகியும் அறையில் இருந்து அவர் வெளியே வரவில்லை. சந்தேகம் அடைந்த பெற்றோர் சென்று பார்த்தனர். அப்போது அறையில் அஸ்வினி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட அஸ்வினியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஸ்வினி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.