செய்திகள்

சிறுமுகை அருகே தாய் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை

Published On 2019-04-23 11:04 GMT   |   Update On 2019-04-23 11:04 GMT
கோவை மாவட்டம் சிறுமுகை அருகே தாய் கண்டித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்:

கோவை மாவட்டம் சிறுமுகை அடுத்துள்ள வச்சினம்பாளையம் மணீஸ் காலனியைச்சேர்ந்தவர் ராஜேஷ்(26) விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் அதிகமாக இருந்ததால் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாகத்தெரிகிறது. இதனை அவரது தாய் மகேஸ்வரி கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன வேதனை அடைந்த ராஜேஷ் கடந்த 18 -ந் தேதி வி‌ஷம் குடித்து விட்டார். மயங்கிக்கிடந்த அவரை அக்கம்பக்கம் இருந்தவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின்னர் ராஜேஷ் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News