செய்திகள்

கிழக்கு முகப்பேரில் போதை மாத்திரையுடன் வாலிபர் கைது

Published On 2019-04-21 10:52 GMT   |   Update On 2019-04-21 10:52 GMT
கிழக்கு முகப்பேரில் போதை மாத்திரையுடன் வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

சென்னை கிழக்கு முகப்பேர் நீச்சல்குளம் அருகில் வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் நிற்பதாகவும், அவர் போதை பொருள் வைத்திருப்பதாகவும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவரிடம் நாக்கில் தடவக்கூடிய போதைப்பொருள் மற்றும் 23 மாத்திரை போதைப்பொருள் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப் பொருட்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த வாலிபரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர் திருவல்லிக்கேணி குப்புமுத்து தெருவை சேர்ந்த சரத் சரவணன் (வயது 23) என்பது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News