செய்திகள்
மதுரை அருகே புதுமாப்பிள்ளை தற்கொலை
மதுரை அருகே புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை கடச்சநேந்தல் இந்திரா காலனியைச் சேர்ந்தவர் வினோத் (வயது 25). இவருக்கும் கலைச்செல்வி என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
வினோத் அடிக்கடி மது குடித்து வந்ததால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் வினோத் மன வேதனை அடைந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பும் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த வினோத் தூக்குப் போட்டு தற்கொலை செய்தார்.
இதுகுறித்து கே.புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.