செய்திகள்

வலங்கைமான் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

Published On 2019-04-08 18:11 GMT   |   Update On 2019-04-08 18:11 GMT
வலங்கைமான் அருகே வயிற்று வலி தாங்க முடியாமல் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வலங்கைமான்:

வலங்கைமான் அருகே உள்ள கொட்டையூர் சர்வமானியம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 45). விவசாயி. இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று வயிற்று வலி தாங்க முடியாமல் சேகர் வீட்டில் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்தார்.

இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கர் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி, சப்-இன்ஸ்பெக்டர் ஓவியா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News