செய்திகள்

பெரியபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் விவசாயி பலி

Published On 2019-04-06 09:19 GMT   |   Update On 2019-04-06 09:19 GMT
பெரியபாளையம் அருகே பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே உள்ள செங்காத்தாகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவர்தனன் (வயது 40) விவசாயி .

இவர் தனது நிலத்தில் போர் போடுவதற்காக கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஆறாவதுமையில் என்ற இடத்தில் உள்ள மேஸ்திரியிடம் பணம் கொடுத்துவிட்டு நேற்று காலை ஆரணி வழியாக பெரியபாளையம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

ஆரணியில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே சென்றபோது பெண் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். கோவர்தனன் அப்பெண் மீது மோட்டார் சைக்கிளை மோதி விட்டு நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்.

இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த கோவர்தனன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பொன்னேரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் அனுமதித்தனர்.

அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கோவர்தனன் பரிதாபமாக பலியானார். படுகாயம் அடைந்த பெண் ஆரணி இருளர் காலனியை சேர்ந்த ரமிஜா (வயது 40) என்று தெரியவந்தது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து ஆரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகமது அலி மற்றும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News