செய்திகள்

தட்டாஞ்சாவடியில் பெண் மயங்கி விழுந்து பலி

Published On 2019-04-05 13:13 GMT   |   Update On 2019-04-05 13:13 GMT
தட்டாஞ்சாவடியில் பெண் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்து போனார்.

புதுச்சேரி:

புதுவை தட்டாஞ்சாவடி சுப்பையா நகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி. வீட்டின் அருகிலேயே மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி மோகனா (வயது48). இவருக்கு ரத்த அழுத்த நோய் இருந்து வந்தது. இதற்காக மருத்துவ சிகிச்சையும் பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்றுமாலை மோகனா குளிப்பதற்கு தயாரானார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து மோகனாவை அவரது குடும்பத்தினர் மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மோகனா பரிதாபமாக இறந்து போனார்.

இது குறித்த புகாரின்பேரில் கோரிமேடு போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் கணபதி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News