செய்திகள்
பிளஸ்-2 மாணவி மீது ஆசிட் வீசுவதாக மிரட்டல்: சேலத்தில் வாலிபர் கைது
சேலம் அம்மாப்பேட்டையில் பிளஸ்-2 மாணவியிடம் தன்னை காதலிக்காவிட்டால் ஆசிட் வீசுவதாக மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கொண்டலாம்பட்டி:
சேலம் அம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்த நிலையில் பாரதி நகரைச் சேர்ந்த அஜித் குமார் (வயது 22) என்பவர் மாணவியிடம் சென்று தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தினார். மேலும் மாணவியை பின்தொடர்ந்து சென்று அவர் தொந்தரவு கொடுத்து வந்தார்.
இதையடுத்து மாணவியை அவரது பெற்றோர் பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்தினர். ஆனால் அப்போதும் மாணவியின் வீட்டிற்கு சென்று அஜித்குமார் பெண் கேட்டார். வயது குறைவாக இருப்பதால் தற்போது திருமணம் செய்து கொடுக்க முடியாது என்று அவரது பெற்றோர் மறுத்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அஜித்குமார் தன்னை காதலிக்காவிட்டால் உன் மீது ஆசிட் வீசுவேன் என்று மிரட்டல் விடுத்தார். இதனால் பயந்துபோன மாணவியின் பெற்றோர் அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர்.
புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி விசாரணை நடத்தி அஜித்குமார் மற்றும் அவரது உறவினர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தார்.
பின்னர் அஜித்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.
சேலம் அம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்த நிலையில் பாரதி நகரைச் சேர்ந்த அஜித் குமார் (வயது 22) என்பவர் மாணவியிடம் சென்று தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தினார். மேலும் மாணவியை பின்தொடர்ந்து சென்று அவர் தொந்தரவு கொடுத்து வந்தார்.
இதையடுத்து மாணவியை அவரது பெற்றோர் பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்தினர். ஆனால் அப்போதும் மாணவியின் வீட்டிற்கு சென்று அஜித்குமார் பெண் கேட்டார். வயது குறைவாக இருப்பதால் தற்போது திருமணம் செய்து கொடுக்க முடியாது என்று அவரது பெற்றோர் மறுத்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அஜித்குமார் தன்னை காதலிக்காவிட்டால் உன் மீது ஆசிட் வீசுவேன் என்று மிரட்டல் விடுத்தார். இதனால் பயந்துபோன மாணவியின் பெற்றோர் அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர்.
புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி விசாரணை நடத்தி அஜித்குமார் மற்றும் அவரது உறவினர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தார்.
பின்னர் அஜித்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.