செய்திகள்

பேரணாம்பட்டில் மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்

Published On 2019-03-26 11:10 GMT   |   Update On 2019-03-26 11:10 GMT
பேரணாம்பட்டில் மணல் கடத்த பயன்படுத்திய மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

செங்கம்:

செங்கம் அடுத்த மேல்புழுதியூர் முறையாறு பாலம் அருகே 4 மாட்டு வண்டிகளில் சிலர் மணல் திருட்டில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் மாட்டு வண்டிகளை மடக்கி பிடித்தனர். மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் போலீசாரை கண்டதும் மாட்டு வண்டியை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடினர்.

மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீசார் செங்கம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று வழக்கு பதிவு செய்தனர். பின்னர் மாட்டு வண்டிகளில் பயன்படுத்தப்பட்ட 8 மாடுகளை திருவண்ணாமலையிலுள்ள ஒரு கோசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News