மதுரை அருகே பெண் உள்பட 3 பேர் தற்கொலை
மதுரை:
மதுரை சோலையழகுபுரம் வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் முத்துபாலன். இவரது மனைவி ஈஸ்வரி (வயது37). கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவர்களிடம் காண்பித்தும் குணமாக வில்லை. இதனால் விரக்தி அடைந்த ஈஸ்வரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஜெய் ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் கள்.
மதுரை பீ.பி.குளம் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் விஜய் (30). குடிபழக்கத்துக்கு அடிமையானதால் இவருக்கும், மனைவிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த விஜய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அய்யர்பங்களா சசி நகரைச் சேர்ந்தவர் நாகராஜன் (58). குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். வாழ்க்கையில் விரக்தி அடைந்த நாகராஜன் விஷம் குடித்து தற்கொலை செய்தார். தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.