செய்திகள்
மதுக்கரை அருகே தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை
மதுக்கரை அருகே தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுக்கரை அருகே உள்ள மயில்சாமி கோவில் வீதியை சேர்ந்தவர் கார்த்திக்குமார் (வயது 28). தனியார் நிறுவன ஊழியர். சம்பவத்தன்று இவர் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் மனவேதனை அடைந்த கார்த்திக்குமார் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.