search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madukkarai"

    • ஜெயஸ்ரீ கடந்த ஒரு ஆண்டாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
    • இவர்கள் 2 பேரும் திருமணம் செய்யாமல் கணவன்-மனைவி போல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

    கோவை:

    கோவை மதுக்கரை மார்க்கெட்டை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ (வயது 22). லேப் டெக்னீசியன். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது. குடும்ப பிரச்சினை காரணமாக ஜெயஸ்ரீ கடந்த ஒரு ஆண்டாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

    இந்தநிலையில் ஜெயஸ்ரீக்கு, நம்புகுமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரும் ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்தவர். ஜெயஸ்ரீயும், நம்புகுமாரும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்-மனைவி போல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

    நம்புகுமார் தினமும் மது குடித்து விட்டு ஜெயஸ்ரீயிடம் தகராறு செய்து வந்தார். சம்பவத்தன்று அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த ஜெயஸ்ரீ வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட ஜெயஸ்ரீயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இன்று மாலை ஏற்றப்படுகிறது.
    • 3 நாட்கள் தீபம் எரிவதற்காக பக்தர்கள் பசு நெய் வழங்கி வருகின்றனர்.

    குனியமுத்தூர்

    கோவை பாலக்காடு ரோடு குனியமுத்தூர் அடுத்த மதுக்கரையில் பழமை வாய்ந்த தர்ம லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்று மாலை 6 மணி அளவில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

    இதில் கிட்டத்தட்ட 5000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாதாமாதம் பவுர்ணமி தினத்தன்று கிரிவலத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வழக்கமாக கலந்து கொள்வார்கள். இந்த நிலையில் நாளை பகல் கிரிவலம் நடைபெறுகிறது. வருடம் தோறும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று ஒரு லட்சம் பக்தர்கள் வருவது வழக்கம். மேலும் மகா சிவராத்திரியும் இக்கோவிலில் விமர்சையாக நடைபெறும். பிரதோஷ வழிபாடுகளும் சிறப்பாக நடக்கும்.1000 படிகள் ஏறி உச்சியில் சென்று தர்மர் சிவனை வழிபட்டார் என்பது வரலாறு. அந்த சமயத்தில் பீமன் கீழே காவல் காத்ததாகவும், மற்ற தம்பிகள் பாதுகாப்பாக கிரிவலம் வந்ததாகவும் வரலாறு கூறுகிறது. தர்மர் வழிபட்ட காரணத்தால் தர்ம லிங்கேஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

    300 ஆண்டுகளுக்கு முன்பு அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் தனது பசுமாட்டை காணவில்லை என்று தேடிக் கொண்டிருந்தார். அப்போது மலை உச்சியில் சுயம்புலிங்கத்திற்கு மாடு பால் சொரிந்து கொண்டு இருந்ததாக வரலாறு கூறுகிறது. அதன் பின்னர் தான் இந்த தர்மலிங்கேஸ்வரர் கோவிலுக்கு கிராம மக்கள் படையெடுக்க தொடங்கினர். மேலும் கோவிலின் பின்புறத்தில் செல்லும் பாதை வழியாக சேர, சோழ மன்னர்களும் இங்கு வந்து வழிபட்டதாக கூறப்படுகிறது.இக்கோவிலில் இந்த ஆண்டு கார்த்திகை தீப விழா,கார்த்திகை மாதம் 16-ந் தேதி வெள்ளிக்கிழமை அன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. கார்த்திகை 20-ந் தேதியான இன்று காலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. 4.30 மணிக்கு தர்ம லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை காண்பிக்கப்பட்டது.

    இன்று மாலை 6 மணி அளவில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது. நாளை காலை 4.30 மணி அளவில் தர்மலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. மாலை 6 மணிக்கு இரண்டாம் நாள் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மாலை 4.30 மணிக்கு தர்மலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற உள்ளது. மாலை 6 மணிக்கு மூன்றாம் நாள் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 3 நாட்கள் தொடர்ந்து மலை உச்சியில் தீபம் எரிவதற்காக பக்தர்கள் பசு நெய் கோவிலுக்கு வழங்கி வருகின்றனர்.

    • தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வருகிறார்.
    • மர்மநபர்கள், தாங்கள் வைத்திருந்த பீர்பாட்டிலால் சரவணகுமாரை சரமாரியாக தாக்கினர்.

    கோவை:

    தூத்துக்குடியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் சரவணகுமார். இவர் கோவை மதுக்கரையில் உள்ள சத்தியமூர்த்தி நகரில் தங்கி தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து சீராபாளையம் நோக்கி நடந்து சென்றார். அப்போது அவரை மர்மநபர்கள் சிலர் வழிமறித்தனர். அவர்களிடம் எதற்காக என்னை மறிக்கிறீர்கள் என கேட்டார். அதற்கு மர்மநபர்கள் எந்த பதிலும் சொல்லாமல் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த மர்மநபர்கள், தாங்கள் வைத்திருந்த பீர்பாட்டிலால் சரவணகுமாரை சரமாரியாக தாக்கினர். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டியது.

    சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று வாலிபரை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதற்கிடையே தகவல் அறிந்து சரவணகுமாரின் தந்தை செல்வராஜ் கோவை வந்து, மதுக்கரை போலீசில் புகார் கொடுத்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணகுமாரை தாக்கியவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? எதற்காக தாக்கினார்கள் ? முன்விரோதத்தில் தாக்கினரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குரும்பபாளையத்தில், ரூ25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையமும், ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்களையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
    • கோவை சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ.மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று மாலை நடக்கிறது.

    செட்டிபாளையம் :

    கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். கோவை மதுக்கரையில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதனை இன்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    தொடர்ந்து ஏ.சி.சி. டிரஸ்ட் சார்பில் மதுக்கரை அடுத்த குரும்பபாளையத்தில், ரூ25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையமும், ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்களையும் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து அப்பகுதியில், மருத்துவ முகாம் நடைபெற்றது. அதை பார்வையிட்ட அமைச்சர், வரும் முன் காப்போம், மக்களை தேடி மருத்துவத்தை அமைச்சர் துவக்கி வைத்தார். இதில், மாவட்ட ஆட்சியர் சமீரன், துணை இயக்குநர் அருணா, பொது சுகாதார துறை இயக்குநர் செல்வவிநாயகம், ஏசிசி நிர்வாக இயக்குநர் எஸ்ஆர்.டிரிக்கி, கோவை புறநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கோவை சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ.மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று மாலை நடக்கிறது.இதில் அமைச்சர் மா.சுப்பி ரமணியன் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்க ளை வழங்குகிறார். இதில் டீன் ரவீந்திரன், கண்கா ணிப்பாளர் ரவிக்குமார் உள்பட பலர்

    பங்கேற்கின்றனர்.

    • நெடுஞ்சாலைத்துறையினர் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்
    • தார் சாலையை கண்ணால் காண முடியாத அவல நிலை உள்ளது

    குனியமுத்தூர்

    கோவையில் பழுதடைந்த 16 சாலைகளை சீரமைக்க 140 கோடி ரூபாய் டெண்டர் விடப்பட்டது. அதில் சுந்தரா புரத்தில் இருந்து மதுக்கரை செல்லும் சாலையும் அடங்கும். சுந்தராபுரம் சந்திப்பில் இருந்து 1.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையை நான்கு வழிச்சாலையாக அமைக்க 10.2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணி தொடங்கப்படும் என்று நெடுஞ்சாலை துறையினர் அப்போது தெரிவித்திருந்தனர்.

    கடந்த மாதம் 13-ந் தேதி ஆக்கிரமிப்புகள் 15 நாட்களுக்குள் அகற்றப்பட வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறையினர் நோட்டீஸ் அனுப்பி யிருந்தனர். அதன்படி ஆக்கிரமிப்பு செய்தவர்கள் ஆக்கிரமிப்புகளை படுவேகமாக அகற்றி வருகின்றனர்.

    மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி நான்கு வழி பணி தொடக்கத்துக்கு பூஜை செய்து தொடங்கி வைத்தார். அந்த ஜூன் முதல் வாரத்திலேயே பணி தொடங்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்து இருந்தனர். ஆனால் ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்ட போதிலும் இன்னும் சாலை அமைக்கும் பணி தொடங்கப்படவில்லை என்று பொதுமக்கள் குறை கூறி வருகின்றனர்.

    சுந்தராபுரம் மதுக்கரை ஈரோட்டில், சுந்தராபுரம் சந்திப்பில் இருந்து மேம்பாலம் வரை தார் சாலையை கண்ணால் காண முடியாத அவல நிலை உள்ளது. சாலை முழுவதும் குண்டும் குழியுமாக புழுதி படர்ந்த நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் மனமுடைந்த நிலையில் உள்ளனர்.

    பழுதடைந்த சாலை காரணத்தால் ஆங்காங்கே அவ்வப்போது விபத்துகள் நடந்து வருகிறது. சுந்தராபுரம் மதுக்கரை சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் வெறுப்படைந்த மன நிலையில் , குறுக்கு சாலை வழியாக பொள்ளாச்சி ரோட்டில் சென்று பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. வாகன ஓட்டிகள் இந்தசாலையில் பயணத்தை தவிர்ப்பதால் வியாபாரம் பாதிக்கப்படுகிறது என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    மேலும் ஆங்காங்கே பாதாளசாக்கடை பணிக்காக சாலையை பிளாக் செய்து டிவைடர் வைத்து விடுகின்றனர். வாகன ஓட்டிகளுக்கு இதுவும் ஒரு பெரிய தலைவலியாக உள்ளது. குண்டும் குழியுமான சாலை காரணத்தால் குழந்தைகளை அழைத்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஆங்காங்கே விழுந்து எழுந்து செல்லும் நிலையும் காணப்படுகிறது.

    இன்னும் சொல்ல ப்போனால் மழை காலம் தொடங்கி விட்டால் சாலை முழுவதும் சேறும் ச கதியுமாக காட்சி அளிக்கும். அதனை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று அப்பகுதி மக்கள் புலம்பி வருகின்றனர். நல்ல அறிவிப்புகளை கிடப்பில் போடாமல் உடனே அதை செய்து முடிக்க வேண்டும் என்றும், மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு நான்கு வழி சாலை அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என்று பொதுமக்களும் , வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • தட்டிக்கேட்ட கணவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • ஆத்திரம் அடைந்த சதீஸ்குமார், கல்லூரி மாணவரான தனது மகன் பிரவீன்குமாருடன் சேர்ந்து இளம்பெண்ணின் கணவரை தாக்கினார்.

    கோவை:

    கோவை மதுக்கரை அருகே உள்ள நாச்சிபாளையத்தை சேர்ந்த 29 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள தக்காளி மார்க்கெட்டுக்கு தனது தாயுடன் சென்றார். பின்னர் அங்குள்ள டீக்கடையில் டீ குடித்துக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் சதீஸ்குமார் (47) என்பவர் இளம்பெண்ணை உல்லாசமாக இருக்கலாம் வா என அழைத்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தனது கணவரிடம் தெரிவித்தார். உடனடியாக அவர் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றார்.

    அங்கு நின்று கொண்டு இருந்த சதீஸ்குமாரிடம் தனது மனைவியை உல்லாசத்துக்கு அழைத்து குறித்து தட்டிக்கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த சதீஸ்குமார், கல்லூரி மாணவரான தனது மகன் பிரவீன்குமாருடன் சேர்ந்து இளம்பெண்ணின் கணவரை தாக்கினார். இதனை பார்த்த இளம்பெண் தடுக்க சென்றார். அவரையும் 2 பேரும் சேர்ந்து தாக்கினர். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.

    இதில் படுகாயம் அடைந்த இளம்பெண்ணின் கணவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து இளம்பெண் மதுக்கரை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் இளம்பெண்ணை உல்லாசத்துக்கும் அழைத்த சதீஸ்குமாரை கைதுசெய்தனர்.

    அவர் மீது பெண்கள் வன்ெகாடுமை தடுப்பு சட்டம், தகாத வார்த்தைகளால் பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள கல்லூரி மாணவர் பிரவீன்குமாரை தேடி வருகிறார்கள். 

    மதுக்கரை அருகே கஞ்சா வியாபாரி கொலையில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை மதுக்கரை அருகே உள்ள அறிவொளி நகரை சேர்ந்தவர் அபுதாகீர்(வயது 43). கஞ்சா வியாபாரி.

    சம்பவத்தன்று இரவு இவர் குனியமுத்தூர் ரெயின்போ காலனி பகுதியில் மயங்கி கிடந்தார். அவரது வாயில் ரத்தக் காயம் இருந்தது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரி வித்தனர்.

    உடனடியாக போலீசார் விரைந்து வந்து அபுதாகீரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அபுதாகீர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் அபுதாகீரை இடையர்பாளையத்தை சேர்ந்த அராத்நிசார், அனந்த், கோபி என்கிற கோபிநாத், சுகுணாபுரத்தை சேர்ந்த பாவா, முஜிபூர் ரகுமான், ஜமீல், முகமது ஹூசைன் (40) ஆகியோர் சேர்ந்து கஞ்சா விற்பனைக்கு பிரிப்பதற்கு ஏற்பட்ட தகராறில் அடித்து கொலை செய்தது தெரிய வந்தது.

    இந்த கொலை வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக இருந்த கோபிநாத், முகமது ஹூசைன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அராத் நிசார், அனந்த், பாவா, முஜிபூர் ரகுமான், ஜமீல் ஆகியோரை வலை வீசி தேடி வருகிறார்கள்.

    மதுக்கரையில் பேராசிரியர் வீட்டில் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    மதுக்கரை வஞ்சியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சார்லி (வயது 52). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அன்சியா நர்சாக பணியாற்றி வருகிறார்.

    நேற்று புனித வெள்ளியையொட்டி சார்லி, தனது மனைவி, மகளுடன் ஆலயத்துக்கு சென்றார். பின்னர் மதியம் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 18 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து அவர் மதுக்கரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வீட்டை நன்கு நோட்ட மிட்டு, ஆட்கள் வெளியே செல்வதை கண்காணித்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர்கள் யார்-யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுக்கரை அருகே தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    மதுக்கரை அருகே உள்ள மயில்சாமி கோவில் வீதியை சேர்ந்தவர் கார்த்திக்குமார் (வயது 28). தனியார் நிறுவன ஊழியர். சம்பவத்தன்று இவர் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் மனவேதனை அடைந்த கார்த்திக்குமார் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×