செய்திகள்

பாபநாசத்தில் கோவில் நிலத்தில் சந்தனமரம் திருட்டு- போலீசார் விசாரணை

Published On 2019-03-16 11:22 GMT   |   Update On 2019-03-16 11:22 GMT
பாபநாசத்தில் கோவில் நிலத்தில் இருந்த சந்தனமரத்தை மர்ம நபர்கள் வெட்டி எடுத்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் அவர்களை தேடி வருகிறார்கள்.

பாபநாசம்:

பாபநாசம் திருப்பாலைத்துறை சன்னதி தெருவில் வசித்து வருபவர் தேவேந்திரன் (வயது 45). இவர் திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை நீண்ட வருடமாக குத்தகைக்கு வைத்துள்ளார். அந்த நிலத்தில் இருந்த சந்தன மரத்தை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் வெட்டி எடுத்து சென்றுவிட்டனர். அதன் மதிப்பு ரூ.20 ஆயிரம் ஆகும்.

இதுகுறித்து தேவேந்திரன் பாபநாசம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் வழக்கு பதிவு செய்து சந்தன மரத்தை வெட்டி எடுத்து சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றார்.

Tags:    

Similar News