செய்திகள்
வெள்ளகோவில் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் முத்தூர் அடுத்த முத்துக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 53). தொழிலாளி. இவர் நேற்று காங்கயம்- முத்தூர் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் கீழே விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த குணசேகரன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் முத்தூர் அடுத்த முத்துக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 53). தொழிலாளி. இவர் நேற்று காங்கயம்- முத்தூர் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் கீழே விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த குணசேகரன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.